Connect with us

இந்தியா

என் வாழ்நாள் முழுவதும் நான் மாணவனாக இருக்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு!

Published

on

குஜராத் மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று காந்தி நகரில் உள்ள அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதிய கல்விக் கொள்கை

பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், மாணவர்களுக்கு முன்னதாக புத்தக அறிவை கொடுத்து வந்தோம். புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அந்த நிலைமை மாறும். குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அவர்களின் தாய்மொழியில் வழங்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். புதிய கல்விக் கொள்கையில் அதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது.

மாணவனாக இருக்கிறேன் 

என்னுடைய வாழ்நாளில் நான் ஆசிரியராக பண புரிந்ததில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதிலும் சமூக சூழ்நிலைகளை மிக நுணுக்கமாக படிக்கும் மாணவனாக இருக்கிறேன். உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர்களில் சிலர், அவர்களுடைய ஆசிரியர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர். இது நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய செய்தி ஆகும். நம் நாட்டில் தரம் வாய்ந்த பல ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர் என பிரதமர் மோடி கூறினார்.

புதிய கல்விக் கொள்கையை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த உரை, மாணவர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?