Connect with us

உலகம்

துருக்கியில் அதிபயங்கர நிலநடுக்கம்: 300-ஐ தாண்டிய உயிரிழப்பு

Published

on

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. மேலும் 600 க்கு மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#image_title

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும் 15 நிமிடங்கள் இடைவெளியில் 6.7 ரிக்டர் அளவில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. இதில் சிரியாவில் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்த நிலையில் மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 600 க்கு மேற்பட்டோர் சிகிச்சையும் பெற்று வருகிறது.

மீட்பு பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன் என துருக்கி அதிபர் கூறியுள்ளார். மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ் நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?