Connect with us

இந்தியா

HDFC சி.இ.ஓ பதவி மீண்டும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு.. யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்?

Published

on

HDFC வங்கியின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் சஷிதர் ஜெகதீசன் மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 1996 ஆம் ஆண்டு சஷிதர் ஜெகதீசன் என்பவர் HDFC வங்கியில் பணியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு தலைமை நிதி அதிகாரியாக பதவி பெற்று அதன் பிறகு எம்டி மற்றும் சிஇஓ பணியிலும் அமர்ந்தார்.

1996 ஆம் ஆண்டு முதல் நிதித்துறை மேலாளராக சேர்ந்ததிலிருந்து அவர் படிப்படியாக வங்கியின் வளர்ச்சிக்காக தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார் என்பதும் நிதி வணிக தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் அவர் HDFC வங்கியில் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 33 வருட வங்கி அனுபவத்துடன் இருக்கும் ஜெகதீசன் தற்போது மேலும் 3 ஆண்டு காலத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக HDFC வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு பங்குதாரர்களின் ஒப்புதலையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#image_title

நேற்று இந்த வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் வங்கியின் நிர்வாக இயக்குனராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சஷிதர் ஜெகதீசனை மீண்டும் நியமனம் செய்ய ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

HDFC வங்கியில் சேர்வதற்கு முன்னர் ஜெகதீசன் டாய்ட்ஸ் வங்கியில் நிதி கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பட்டம் பெற்ற அவர் பட்டய கணக்கிலும் பட்டம் பெற்றார் என்பதும் இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணம் மற்றும் வங்கி நிதியியல் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

HDFC வங்கியின் வீட்டுக் கடன்களின் சீரான விநியோகத்தை எளிதாக்கியது இவர்தான் என்பதும் 68 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொருளாதாரத்தின் கடன் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?