Connect with us

இந்தியா

வழுக்கை தலையில் முடிமாற்று சிகிச்சை.. 30 வயது இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

Published

on

வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 30 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடந்த சில ஆண்டுகளாக தலைமுடியில் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் வழுக்கை தலையில் பல்வேறு வைத்தியங்கள் செய்து முடியை வளர்க்க பணத்தை செலவு செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த 30 வயது ரசித் என்பவர் தனது வழுக்கை தலையில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அவருக்கு முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர் அவரது தலையில் திடீரென வீக்கம் பரவியதாகவும் அவரது சிறுநீரகம் திடீரென செயல் இழந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி அவருடைய மற்ற உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழந்ஹு வந்த நிலையில் கடைசியில் ரசித்து இறந்து விட்டார்.

அவர் இறக்கும் போது அவருடைய முகம் வீங்கி இருந்ததாகவும் அவரது உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் தடிப்புகள் இருந்ததாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்த இருவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு திறமையான முடிமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களால் மட்டுமே இதனை மசெய்ய முடியும் என்றும் அரைகுறையாக தெரிந்தவர்கள் செய்வதால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து ரசித் தாயார் கூறிய போது தயவு செய்து என்னை மாதிரி யாரும் குழந்தைகளை இழந்து விடாதீர்கள், முடி இல்லை என்றால் பரவாயில்லை, அதற்காக உயிரை இழக்கும் நிலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறியுள்ளார்.

இதனை அடுத்து முடிமாற்று அறுவைசிகிச்சை செய்யப்படும் கிளினிக்குகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் உரிய முறையான மருத்துவர்கள் அந்த சிகிச்சை செய்கிறார்களா? கிளினிக்களுக்கு உரிய லைசென்ஸ் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?