Connect with us

இந்தியா

இந்தியாவில் யாருக்கும் இல்லாத ரத்த பிரிவு.. குஜராத் நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Published

on

இந்தியாவில் யாருக்குமே இல்லாத புது வகை ரத்த பிரிவு குஜராத்தை சேர்ந்த நபருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு தனித்துவமான இஎம்எம் நெகட்டிவ் என்ற ரத்தப்பிரிவு இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக மனிதர்களுக்கு ஏ, பி, ஓ அல்லது ஏபி வகை ரத்தங்கள் தான் இருக்கும் என்பதும் ஆனால் இஎம்எம் நெகட்டிவ் ரத்த வகை என்பது மிகவும் அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிலேயே இந்த வகை ரத்த பிரிவு உள்ளவர்கள் 9 பேர்கள் தான் உள்ளனர் என்பதும் இந்த வகை ரத்தப் பிரிவு உள்ளவர்கள் பிறருக்கு ரத்தம் கொடுக்கவா அல்லது பிறரிடம் இருந்து ரத்த தானம் பெறவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் இதய நோய் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. அப்போதுதான் அவர் இஎம்எம் நெகட்டிவ் என்ற அரிதான ரத்த பிரிவை கொண்டவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே இந்த வகை ரத்தப்பிருவு கொண்ட முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் ஏற்கனவே 9 நபர்கள் இந்த வகை ரத்த பிரிவை இருக்கும் நிலையில் இவர் பத்தாவது நபராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அகமதாபாத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்த இதய நோயாளிக்கு தற்போது இதய அறுவை சிகிச்சை செய்ய ரத்தம் தேவைப்படுவதாகவும் ஆனால் இந்த வகை ரத்தம் கிடைக்காது என்பதால் மருத்துவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு அவருடைய ரத்த மாதிரி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு உள்ள இதே ரத்த பிரிவை சேர்ந்தவர்களிடம் இருந்து ரத்ததானம் கிடைக்குமா? என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அந்த முதியவரின் உறவினர்கள் அமெரிக்காவுக்கு சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதியவரின் ரத்த வகையை பிரிவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை என்பதை அடுத்து அவருக்கு எப்படி ரத்தம் செலுத்தப்படும்? அவரது அறுவை சிகிச்சை எப்படி நடத்தப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் சர்வதேச இரத்த மாற்று சங்கத்திலும் உதவி கேட்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?