டிவி

பாலாஜியை டார்கெட் செய்யும் அர்ச்சனா.. குரூப் அமைத்த டிவி தொகுப்பாளர்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ல் குரூபிஸம் இருக்கிறது என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறிய போது, இங்கு எங்கு குரூப்பிஸம் உள்ளது என்று ரியோ ராஜ் கோபமாகச் சண்டைக்குச் சென்றார்.

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில், அர்ச்சனா, ரியோ ராஜ், நிஷா, வேல்முருகன் உள்ளிட்டோர் பாலாஜியை டார்கெட் செய்கின்றனர். அதை பார்க்கும் போது குரூப்பிசம் உள்ளது என்று தெளிவாகத் தெரிகிறது.

இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் சண்டையை ஆரம்பிக்கும் அர்ச்சனா, “அங்கு வந்து உட்காரச் சொல்கிறார். ஒரு நாள் முழுக்க அம்மி அரைக்க வைக்கிறேன் என்று பாலாஜி கூறுகிறார். சொன்னாரா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள் என்று யாரையோ பார்த்துச் சொல்கிறார். பாலாஜி, நான் எல்லோரையும் அம்மி அரைக்க வைக்கிறேன் என்றேன், அதில் என்ன தவறு உள்ளது என்று கேட்கிறார்.

எல்லாரையும் உட்கார வைத்து அம்மி அரைக்க வைக்க உடுரேன் என்றால், இங்கு இருப்பவர்களை எல்லாம் என்ன நினைக்கிறீர்கள் என்று ரியோ, பாலாஜியிடம் ஆவேசமாகக் கேட்கிறார்.

அடுத்ததாக வரும் நிஷா, பெண்களை எல்லா உட்கார வைத்து அம்மி அரைக்க வைக்கிறேன் என்று கூறினால், அதற்கு என்ன அர்த்தம் என்கிறார். ரியோ மரியாதை முக்கியம் என்கிறார். நான் எதுவுமே மரியாதைக் குறைவாகப் பேசவில்லை என்கிறார் பாலாஜி. உடனே சூடாகும் வேல் முருகன் கேமாரா பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று பாலாஜி மீது பொங்குகிறார்.

நான் இங்கு இருக்கும் போது எப்பவுமே அவன் எதாவது இப்படி பண்ணுவான் என்று எனக்குத் தெரியும் என்கிறார் அர்ச்சனா. என்னங்க தோன்றுவதை எல்லாம் பேசுகிறதுக்கு இப்படி பண்றிங்க என்கிறார் பாலாஜி. அம்மியில் அரைத்த பிறகு தான அந்த சோத்த தின்கிறாய் என்று கேட்கிறார் அர்ச்சனா.”

இந்த ப்ரோமவை பார்க்கும் போது பெண்களுக்கு ஆதரவாகப் பேசுவது என்பது போலத் தெரிந்தாலும், பாலாஜியை குரூப்பாக சேர்ந்து டார்கெட் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவர்கள் இப்படி இருந்தால், நடப்பு சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி வெற்றியாளராக வருவார். பிறர் எல்லாம் வெளியே சென்றுவிடுவார்கள் என்பது போலவே தோன்றுகிறது.

Trending

Exit mobile version