Connect with us

தமிழ்நாடு

வெளியானது குரூப் 4 தேர்வு முடிவுகள்: மகிழ்ச்சியில் தேர்வர்கள்!

Published

on

கிராம நிர்வாக அலுவலர் உள்பட டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த வருடம் (2022) ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

குரூப் 4 தேர்வு

குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது. இதனையடுத்து தேர்வை எழுதிய தேர்வர்கள், சமூக வலைதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என, தேர்வை நடத்திய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்து இருந்த நிலையில் இன்று குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

காலிப் பணியிடங்கள்

குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான போது, 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அவ்வகையில், 2 ஆயிரத்து 816 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரத்து 117 பணியிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தேர்வர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

முடிவுகள் வெளியீடு

தேர்வர்கள் எதிர்ப்பார்த்த குரூப் 4 தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை TNPSC இணையதளத்தில் தேர்வர்கள் பார்த்துக் கொள்ளலாம். கட் ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இனிமேல் தான் தெரிய வரும்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?