செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கு 15ம் தேதி வரை நீட்டிப்பு.. முக்கிய தளர்வுகள் என்னென்ன?…..
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா படிப்படியாக குறைந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழே சென்றது. ஆனாலும், தனியார் பார்கள் செயல்பட அனுமதி மறுப்பு, பேருந்துகள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, கேரள மாநிலத்திற்கு பேருந்து செல்ல அனுமதி மறுப்பு என சில கட்டுப்பாடுகள் அமூலில் இருந்தது.
இந்நிலையில், சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தினார். அதன்பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியானது. நவம்பர் 15ம் தேதி முதல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு
அறிவித்துள்ளது. அதேபோல், நவம்பர் 1ம் தேதி முதல் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 8ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் இயங்கும்
நவம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி..
திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்..
அனைத்து வகை கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் முழு நேரமும் இயங்கலாம்..
சிகிச்சை தேவைகளுக்கு மட்டும் நீச்சல் குளம் இயங்கலாம்..
தனித்து இயங்கும் தனியார் பார்கள் செயல்பட அனுமதி…
கேரள மாநிலம் தவிர மற்ற மாநிலங்களுக்கு பேருந்தில் செல்ல அனுமதி…
சாதாரண மற்றும் குளிர் பேருந்துகளில் 100 சதவீத இருக்கைகு அனுமதி…
சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்வோர் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
என சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.