Connect with us

தமிழ்நாடு

அமமுக புகாரில் ஈபிஎஸ் மீது வழக்கு பதிவு: அதிமுக கண்டன போராட்டம்!

Published

on

நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனின் செல்ஃபோனை பறித்து அவரை அதிமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிமுக கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

#image_title

சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஆத்திரமடைந்து, அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்தார்.

பின்னர் அவரை விமான நிலைய வளாகத்தில் சட்டை பிடித்து இழுத்து வந்தார். அங்கிருந்து அதிமுகவினர் சிலர் அமமுக நிர்வாகி ராஜேஸ்வரனை தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதாக காவல்துறையில் ராஜேஸ்வரன் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதேப்போல் ராஜேஸ்வரனும் முகநூலில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய போது, அவரது நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் தன்னை தாக்கி செல்ஃபோனை பறித்ததாகவும், எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் அவரது உதவியாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தகாத வார்த்தைகளால் பேசி தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அவரது உதவியாளர் கிருஷ்ணன், எம்எல்ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமமுக பிரமுகரை தாக்கிய புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து மதுரையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை விமானநிலைய சம்பவத்தின்போது எடப்பாடி பழனிசாமி மிகவும் அமைதியாக இருந்தார், தற்போதைய முதல்வரின் ஆலோசனையின் பேரில் எங்கள் தலைவர் எடப்பாடி மீது திட்டமிட்டுப் பொய் வழக்குப் போட்டு உள்ளனர். இது காவல்துறையால் ஜோடிக்கப்பட்டது என்று கூறி அதிமுகவினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் நடந்து வரும் இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆரோக்கியம்7 mins ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு43 mins ago

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு56 mins ago

டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

சினிமா1 hour ago

அனுராக் கஷ்யப்பை இயக்கும் சசிக்குமார்?

வேலைவாய்ப்பு2 hours ago

ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் டாடா மெமோரியல் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 hours ago

இன்றைய தங்கம் விலை (26/03/2023)!

சினிமா செய்திகள்4 hours ago

‘கீர்த்தி சுரேஷிடம் இதைக் கேட்கவே மாட்டோம்’- மேனகா சுரேஷ்

இந்தியா5 hours ago

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

சினிமா செய்திகள்17 hours ago

‘பகாசூரன்’ படத்திற்கு திட்டமிட்ட எதிர்வினை’- இயக்குநர் மோகன்.ஜி

இந்தியா17 hours ago

இந்தியாவின் அடுத்த தலைமுறை கோடீஸ்வரர்கள் – தொழிலதிபர்கள் இவர்கள் தான்..!

வேலைவாய்ப்பு5 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்6 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

உலகம்6 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்6 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

கிரிக்கெட்7 days ago

2nd ODI: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

வேலைவாய்ப்பு6 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்5 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு5 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868