Connect with us

தமிழ்நாடு

மீண்டும் பிசியாகும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்: அரசு வேலை கிடைக்குமென நம்பிக்கை!

Published

on

காலியாக உள்ள அனைத்து அரசு பணிகளும் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை அடுத்து மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலங்களில் இளைஞர்கள் பிசியாக உள்ளனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வைத்திருந்தால் மட்டுமே அரசு பணி கிடைக்கும் என்ற நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் படிப்பை முடித்த இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதுதான் என்பது கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் மீண்டும் அரசு பணிகளில் உள்ள காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் மீண்டும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலங்களில் இதுவரை சுமார் 72 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 56 ஆயிரத்து 917 என வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் 24 முதல் 25 வரை உட்பட்ட பதிவாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 26 லட்சம் என்றும் 36 வயதுக்கு மேற்பட்டோர் பதிவு செய்துள்ளது சுமார் 13 லட்சம் என்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 லட்சம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?