Connect with us

இந்தியா

தேர்தல் முடிந்தவுடன் வேலையை காட்டிய மத்திய அரசு. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு..!

Published

on

நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள் கூட எண்ணப்படாத நிலையில் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

———-சென்னையில் சிலிண்டரின் விலை 1068 ரூபாய் என்று விற்பனையாகி வரும் நிலையில் இந்த விலையே மிக அதிகம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சென்னையில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படும் சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரூபாய் 1118.50 என இன்று முதல் சிலிண்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை கடந்த 10 மாதங்களாக உயராமல் இருந்தாலும் அவ்வப்போது சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாகும் நிலையில் சட்டசபை தேர்தலை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டரின் விலை கடந்த சில மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் 3 மாநில தேர்தல் முடிந்த நிலையில் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டுமின்றி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.223 உயர்ந்து ரூபாய் 2268 என இன்று முதல் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?