Connect with us

தமிழ்நாடு

அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு, 500 கோடி ரூபாய் இழப்பீடு… நோட்டீஸ் அனுப்பியது திமுக!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் திமுக முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது ஊழல் குற்றாச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பட்டியலை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதித்து திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

#image_title

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14-ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியல் என ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின் 200 கோடி ரூபாய் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், அவர் மீது சிபிஐயில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்வினையாக தற்போது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக திமுக மூத்த வழக்கறிஞரும், எம்பியுமான வில்சன் மூலமாக அண்ணாமலை தனது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் திமுக மற்றும் அதன் தலைவர் சார்பாக ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளதாவது, உங்கள் பேச்சு/குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக ஊடகங்கள், இணையதளங்களில் இது தொடர்பான வீடியோவை நீக்க வேண்டும்.

இழப்பீடு தொகையாக ரூபாய் 500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். இந்த கடிதம் கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராகப் பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?