சினிமா செய்திகள்

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் 3 பாகங்களாக உருவாகும்!

Published

on

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் இயக்குநர்களில் ஒருவர் ராஜமவுலி. இவரது படம் என்றாலே அனைவருக்கும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த அளவிற்கு படத்தை தரமாக எடுக்கும் வல்லமை படைத்தவர். இப்போது இவர் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைய உள்ளார்.

ராஜமவுலி – மகேஷ்பாபு கூட்டணி

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாகவும், அமேசான் காடுகளில் இத்திரைபபடம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதையானது, இந்து கடவுள்களில் ஒருவரான அனுமனை மனதில் வைத்து எழுதப்பட்டது என கூறப்படுகிறது. மேலும் இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே, ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ இரண்டு பாகங்களுடன் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது அவரது அடுத்த படம் மூன்று பாகங்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்திய திரையுலகில் அதிகளவு பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுவாகத் தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், ராஜமவுலி படம் என்றாலே தனி மவுசு உண்டு என்பதால், இப்படமும் 1000 கோடி வசூலை எட்டும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version