சினிமா

பாலியல் தொந்தரவு கொடுத்தாரா யஷ்?- ஸ்ரீநிதி விளக்கம்!

Published

on

கன்னட நடிகர் யஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

கன்னடத் திரையுலகில் ‘கேஜிஎஃப்’ திரைப்படம் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். உலக அளவில் கன்னட திரைப்படங்கள் மீது இன்றைய தலைமுறையினர் பலர் கவனம் குவிக்க ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டு பாகங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. இதன் இரண்டு பாகங்களிலும் நடிகர் யஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஸ்ரீநிதிக்கு பெரும் புகழ் வெளிச்சம் கிடைத்தது. தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்தில் நடித்தார். இந்த நிலையில் ‘கேஜிஎஃப்’ படப்பிடிப்பின் பொழுது நடிகர் யஷ், ஸ்ரீநிதிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் கொடுத்துள்ளார்.

‘சமூக ஊடகங்கள் என்பது இன்று மிகப்பெரிய ஒரு கருவி. அதை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது போன்ற தவறான செய்திகளுக்கு பயன்படுத்துவதும் இப்பொழுது அதிகமாக இருக்கிறது. இப்பொழுது இந்த செய்திகளுக்கு நான் விளக்கம் கொடுக்கிறேன். யஷ் ஒரு சிறந்த மனிதர்! அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் எனக்கு இருந்தது. படப்பிடிப்பில் அவர் ஒரு ஜென்டில்மேன். அவர் எப்பொழுதுமே எனக்கு நீங்கள் சொல்வது போல தொந்தரவு கொடுத்ததில்லை. படப்பிடிப்பில் நான் அசௌகரியமாக உணர்ந்ததே கிடையாது.

அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியான ஒரு அனுபவம். உங்களைப் போலவே நானும் மிகப்பெரிய ரசிகை’ என இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஸ்ரீநிதி. ‘கே.ஜி.எஃப்’ படத்தின் இரண்டு பாகங்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது பாகம் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version