தமிழ்நாடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுச் சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு.!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் உள்ள பெரிய குழப்பம், சொந்த ஊர்களுக்கு எப்படிச் செல்வது என்பதுதான்.
மக்களின் வசதிக்காக,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3,4,5 தேதிகளில் சுமார் 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து நவம்பர் 3,4,5 தேதிகளில் 11,367 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து சுமார் 9,200 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு நவம்பர் 1 முதல் துவங்கும், கூடுதலாகக் கோயம்பேட்டில் 26 உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுத்தபடுள்ளது.
தாம்பரம்,கே.கே.நகர், கோயம்பேடு பகுதிகளில் இருந்து பேருந்துகள் கிளம்பும்.
பண்டிகை முடிந்து ஊர் திரும்ப 12,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அதிகக் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.