இந்தியா

அதிர்ச்சி.. ஒரே ஏடிஎம்-ல் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு!

Published

on

குஜராத்தில் ஒரே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் பரோடாவில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் மூன்று ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து பணம் எடுத்துள்ளனர்.

அந்த மூன்று வீரர்களுக்கும் இப்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்த 26 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த ஏடிஎம் மையத்தை மூடியது மட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களாகப் பணம் எடுத்த வாடிக்கையாளர்களையும், கொரோனா பரிசோதனைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

Trending

Exit mobile version