சினிமா செய்திகள்
கொரோனா எதிரோலி.. 3 படங்களில் சம்பளத்தில் தலா 25% குறைத்துக்கொண்ட விஜய் ஆண்டனி!
கொரோனா எதிரொலியாக திரைப்பட ஷூட்டிங் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளதால், படத் தயாரிப்பில் இருந்த தயாரிப்பாளர்களின் நிலை மோசமாக உள்ளது.
எனவே நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தம் கையில் தற்போது உள்ள மூன்று படங்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதன் படிம் விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி திரைப்படங்களில் தனது சம்பளத்தில் இருந்து 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.
அதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள, விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் படத்தை தயாரித்து வரும் டி.சிவா, “பிற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் சம்பளத்தின் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு விட்டுத்தர முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமால் உள்ள பல சிறு தயாரிப்பாளர்கள், ஃபினான்சியர்களிடம் கடன் வாங்கி படத்தை தயாரிக்கும் நிலையில், கொரோனா ஊரடங்கால் அதற்கான வட்டியை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே விஜய் ஆண்டனி போன்று பிற நடிகர்களும் சம்பளத்தை விட்டுக்கொடுத்தால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.