தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி சென்ற விமானத்தில் இயந்திரக்கோளாறு!

Published

on

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். பிரதமரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால் அவர் மீண்டும் சென்னை திரும்பினார்.

இன்று கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்கும், சில திட்டங்களை நாட்டுக்கு அற்பணிக்கவும் வரும் பிரதமர் மோடி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார்.

பிரதமர் கலந்துகொள்ள உள்ள இந்த அரசு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முத‌ல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிளம்பிய விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால், அவர் மீண்டும் சென்னை திரும்பினார். இதையடுத்து மாற்று விமானம் மூலம் சென்னையில் இருந்து மதுரை செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி செல்கிறார்.

Trending

Exit mobile version