சினிமா
நீ என்னை மன்னிக்க மாட்டாய் பவானி!… யாஷிகா ஆனந்த் கண்ணீர் பதிவு….
சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் காரில் படுவேகமாக சென்ற போது ஏற்பட்ட விபத்தில் அவரின் தோழி பவானி என்பவர் உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். ஒரு வார சிகிச்சைக்குபின் அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் மீது காரை வேகமாக ஓட்டியது, விபத்து ஏற்படுத்தியது என்பது உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கண்ணீர் பதிவை இட்டுள்ளார். அதில் ‘ என்னால் எதுவும் கூற முடியவில்லை. வாழ்வதற்கே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது. அந்த விபத்திலிருந்து நான் பிழைத்ததற்காக கடவுளிடம் நன்றி சொல்வதா அல்லது என் நெருங்கிய தோழியை என்னிடமிருந்து எடுத்துக்கொண்ட கடவுளை குறை சொல்வதா என தெரியவில்லை. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் பவானி. எனக்கு தெரியும் நீ என்னை மன்னிக்கமாட்டாய். உன் குடும்பத்திற்கு துயரத்தை கொடுத்துவிட்டேன். உன் ஆத்மா அமைதி கொள்ளட்டும். நீ என்னிடம் திரும்பி வர பிரார்த்தனை செய்கிறேன். என்றோ ஒரு நாள் உன் குடும்பம் என்னை மன்னிப்பார்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும், என் பிறந்தநாளை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. எனவே, என் ரசிகர்களும் கொண்டாட வேண்டாம். என் தோழியின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். இது என் வாழ்வில் பெரிய இழப்பு. என்னை மன்னித்துவிடு. ஐ மிஸ் யூ’ என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram