Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் சினிமாவில் கம்-பேக் கொடுக்கும் ஷாலினி – எந்தப் படம், என்ன ரோல் தெரியுமா?

Published

on

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.

குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரையுலகில் அறிமுகமான ஷாலினி, தென்னிந்திய மொழிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். காதலுக்கு மரியாதை திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான ஷாலினி, அஜித்துடன் இணைந்து ‘அமர்க்களம்’ படத்தில் நடத்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் முளைத்தது. அந்தக் காதல் 2000 ஆம் ஆண்டு, திருமணத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்னும் பெண் குழந்தை பிறந்தது. 2015 ஆம் ஆண்டு அவர்களுக்கு மீண்டும் ஆத்விக் என்னும் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையைத் தான் அஜித் ரசிகர்கள் ‘குட்டித் தல’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள்.

திருமணத்துக்குப் பின்னர் திரை வாழ்க்கைக்கு முடக்குப் போட்ட ஷாலினி, பேட்மின்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். அவர் தேசிய அளவில் முக்கிய பேட்மின்டன் வீராங்கனையாகவும் உயர்ந்தார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

இயக்குநர் மணிரத்னம், பிரம்மாண்ட பொருட் செலவிலும், நட்சத்திரப் பட்டாளங்களுடனும் எடுத்து வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அந்தப் படத்தில் ஷாலினி ஒரு கேமியோ ரோல் செய்ய இருக்கிறாராம். ஷாலினியின் கம்-பேக் திரைப்படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?