Connect with us

சினிமா செய்திகள்

ரஜினி, தனுஷ்க்கு ஒரே நாளில் விருது: மத்திய அமைச்சர் அறிவிப்பு

Published

on

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கும் தேசிய விருது பெற்ற தனுசுக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் இதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கு அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டது என்பதும் சிறந்த இயக்குனராக வெற்றிமாறன் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகிப் பால்கே விருதை அறிவித்தார். இந்த நிலையில் தேசிய விருதுகள் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஒரே நாளில் வழங்கப்படும் என்றும் இந்த விருது வழங்கும் விழா மே 3ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மே 3ஆம் தேதி தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கும், தேசிய விருது தனுஷுக்கும் என ஒரே நாளில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மாமனார் மருமகன் ஆகிய ரஜினி, தனுஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் மிக உயர்ந்த விருதுகள் பெற இருப்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?