சினிமா செய்திகள்
ரஜினி, தனுஷ்க்கு ஒரே நாளில் விருது: மத்திய அமைச்சர் அறிவிப்பு
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கும் தேசிய விருது பெற்ற தனுசுக்கும் ஒரே நாளில் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன என்பதும் இதில் சிறந்த நடிகருக்கான விருது தனுஷ் மற்றும் மனோஜ் பாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகைக்கான விருது கங்கனா ரனாவத்துக்கு அறிவிக்கப்பட்டது என்பதும் தமிழில் சிறந்த படமாக அசுரன் தேர்வு செய்யப்பட்டது என்பதும் சிறந்த இயக்குனராக வெற்றிமாறன் தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகிப் பால்கே விருதை அறிவித்தார். இந்த நிலையில் தேசிய விருதுகள் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஒரே நாளில் வழங்கப்படும் என்றும் இந்த விருது வழங்கும் விழா மே 3ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மே 3ஆம் தேதி தாதாசாகேப் பால்கே விருது ரஜினிக்கும், தேசிய விருது தனுஷுக்கும் என ஒரே நாளில் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் மாமனார் மருமகன் ஆகிய ரஜினி, தனுஷ் ஆகிய இருவரும் ஒரே நாளில் மிக உயர்ந்த விருதுகள் பெற இருப்பது ஆச்சரியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.