Connect with us

சினிமா

ஜெய்பீம் பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ்…

Published

on

ragava

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. போலீசாரால் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட ராசாக்கண்ணு என்பவரின் உண்மை கதை ஆகும்.

இந்த நிலையில் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் இன்றும் உயிருடன் இருக்கும் நிலையில் அவரை பல பத்திரிகை பிரபலங்கள் பேட்டி எடுத்து வருகின்றனர். அவ்வாறு ஒரு ஊடகத்தின் பேட்டியின் மூலம் ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் வறுமையில் இருப்பதை அறிந்த பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் பார்வதி அம்மாளுக்கு உதவ முன் வந்தார்.

பார்வதி அம்மாள் அவர்களின் தற்போதைய நிலையை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் அவருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவரை சந்திக்க விரும்பிய அவர் பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனல் உதவியுடன் பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போதே அவருக்கு ரூ1 லட்சத்திற்கான காசோலையை அவர் வழங்கினார். பார்வதி அம்மாவுக்கு அரியலூரில் இடம் உள்ளது. எனவே, அங்கு வீடு கட்டிதர முடிவெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பூமி பூஜை நடக்கும் எனவும் அப்போது நேரில் வருவேன் என அவர் பார்வதி அம்மாவிடம் வாக்குறுதி அளித்தார். அதோடு, போலீசாரின் தாக்குதலில் மனம்நலம் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாவின் மூத்த மகனின் மனைவி மாற்றுத்திறனாளி என்பதால் அவருக்கும் ரூ.2 லட்சம் கொடுப்பதாக கூறியுள்ளார்.

வணிகம்21 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?