சினிமா
ஜெய்பீம் படக்குழுவினரை பாராட்டிய நல்லக்கண்ணு.. வைரல் புகைப்படங்கள்….
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இ
ப்படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும், இப்படத்தை பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தில் தோன்றும் இன்ஸ்பெக்டர் கேரக்டர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் போன்றும் வன்னியர் சமுதாயம் என்றாலே வன்முறையாளர்கள் என்பது போன்றும் ’ஜெய்பீம்’ படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான அன்புமணி ராமதாஸ் சூர்யாவுக்கு மிரட்டும் தொனியில் ஒரு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யா விளக்கமளித்தும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், கம்யூனிஸ் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இப்படத்தை சமீபத்தில் பார்த்தார். மேலும், படக்குழுவினரை நேரில் வரவழைத்து அவர்களுக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்தார். நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மற்றும் சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஆகியோர் அவரை நேரில் சந்தித்தனர். மேலும், சில கம்யூனிஸ்ட் தலைவர்களும் அவர்களுடன் இருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சூர்யா கம்யூனிஸ்ட்டாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.