சினிமா
மாநாடு 2 நாள் வசூல் இத்தனை கோடியா? – அதிர்ச்சியில் திரையுலகம்….
சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை. நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதிலும் சில சிக்கல் ஏற்பட்டதால் தேதியின்று ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து சிம்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால், இரவோடு இரவாக பணப்பிரச்சனைகள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக மாநாடு படம் 25ம் தேதி காலை வெளியானது. இப்படத்தை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்ததால் அவர்கள் தியேட்டர்களில் குவிந்தனர். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகிறது. இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.8.5 கோடியை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், 2 நாளில் இப்படம் ரூ.14 கோடி வசூல் செய்துள்ளது. இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சியே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.10 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.