சினிமா
அதிக வசூலில் இது முதல் படம்!.. துல்கர் சல்மானின் ‘குருப்’ செய்த சாதனை…
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த மலையாள படமான ‘குருப்’ என்கிற திரைப்படம் வெளியானது. இன்ஸூரன்ஸ் பணத்திற்கு கொலை செய்து மாட்டிக்கொண்ட சுகுமாரா குரூப் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சுகாமாரா குருப்பாக துல்கர் சல்மான்கான் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி 4 நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூல் ஆகியுள்ளது. இப்படம் தமிழ்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இப்படம் கணிசமான வசூலை பெற்றுள்ளது. துல்கர் சல்மானின் எந்த திரைப்படமும் வெளியாகி 4 நாட்களில் ரூ.50 கோடியை வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக தமிழில் இவர் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.