சினிமா
பாலிவுட்டில் கால் பதிக்கும் இரஞ்சித்
இந்தி பட தயாரிப்பாளர்கள் நம் தமிழ் இயக்குநர் இரஞ்சித்தின் படம் பிடித்துப்போய் அவரைத் தங்கள் அடுத்த இந்தி படத்திற்கு ஒப்பந்தம் செய்யவிருக்கின்றனர்.
ஆம்!’கபாலி’ ‘காலா’ என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தொடர் வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ரஞ்சித்தின் மீது தற்போது பாலிவுட் வெளிச்சம் பாய்ந்துள்ளது.
‘நமா பிக்சர்ஸ்’-ஐ சேர்ந்த தயாரிப்பாள இரட்டையர்களான
ஷரீன் மத்ரியும் கிஷோர் அரோராவும் பாலிவுட்டில் ரஞ்சித்தை அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.
இயக்குநர் இரஞ்சித்தின் சமீபத்திய படைப்புகள் அவர்களைக் கவர்ந்ததே இந்தப் புதுப்பட வாய்ப்புக்குக் காரணம் என சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பீரியட்’ சினிமாவாக அது இருக்கும் எனவும் அடுத்த வருடம் வெளியிடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.