சினிமா
மீண்டும் சென்சார் செய்யப்பட்டது வடசென்னை!
வடசென்னை படத்தில் இடம்பெற்ற முதலிரவு காட்சி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசு ஆபாச வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி வெளியான வடசென்னை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் அமீர், ஆண்ட்ரியா நடிப்பில் இடம்பெற்றிருந்த முதலிரவு காட்சியில் ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக நடித்திருந்த காட்சி மீனவ சமுதாய சகோதர சகோதரிகளின் மனம் புண்படும்படி இருந்ததாகவும் அக்காட்சியை படத்தில் இருந்து நீக்கும்படியும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
தற்போது படக்குழு அந்த காட்சியை நீக்கி விட்டு அதற்கு பதிலாக அமீர், ஆண்ட்ரியா நடித்துள்ள வேறு இரு காட்சிகளை இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் கெட்ட வார்த்தை வசனங்கள் சிலவும் நீக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்