Connect with us

சினிமா

நாயகியாக நடிக்கும் கோவை சரளா: இயக்குனர் யார் தெரியுமா?

Published

on

தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக காமெடி வேடத்தில் நடித்து வரும் நடிகை கோவை சரளா நாயகியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் கடந்த 1979ஆம் ஆண்டு ’வெள்ளி ரதம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’முந்தானை முடிச்சு’ ’வைதேகி காத்திருந்தாள்’ உள்பட பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை கோவை சரளா. அவருடைய காமெடிக்கு என ஒரு குறிப்பிட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த ‘சதிலீலாவதி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்த கோவை சரளா, அந்த படத்தில் கோவைத்தமிழ் பேசி கலக்கி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கும் அடுத்த படத்தில் மீண்டும் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் அவர் ஒரு பாட்டி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தனது பேத்திக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி வாங்கித்தரும் சீரியசான கேரக்டர் என்றும் இந்த படத்தில் ஒரு காட்சி கூட காமெடி காட்சி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஆதிவாசிகளுக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு நீதி வாங்கித்தரும் முக்கிய கேரக்டரில் கோவைசரளா நடித்து வருகிறார் என்றும் இந்த கேரக்டர் அவரது நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கும்கி, மைனா போன்ற மலை சார்ந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் பிரபுசாலமன் இந்த படத்தையும் முழுக்க முழுக்க மலை சார்ந்த பகுதியில் தான் படப்பிடிப்பை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?