சினிமா
டிவி நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேற காரணம் அந்த நடிகைதானாம்!….
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில், விஜய் டிவியில் பணிபுரியும் ஒருவர் மீது அவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘ஒரு சீனியர் பெண்மணி தன்னுடைய வளர்ச்சியை பொறுக்காமல் என்னை துன்புறுத்துகிறார், என்னை அசிங்கமாக நடத்துகிறார். இதை ஏற்க முடியாது. எனவே, ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன்’ எனக்கூறியிருந்தார்.அதேநேரம், யார் தன்னை மோசமாக நடத்தியது என்பது பற்றி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.
தற்போது அது யார் என்பது தெரியவந்துள்ளது. அந்நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவராக இருக்கும் ரம்யா கிருஷ்ணனைத்தான் அவர் கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் ஜோடி ஜோடியாக கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டும். இதில் 10க்கு அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதை ரம்யா கிருஷ்ணன் அறிவிப்பார்.
இதில், வனிதா விஜயகுமாரும்,பிக்பாஸ் சுரேஷும் ஒரு ஜோடியாக பங்கேற்றனர். ஆனால், அவர்களின் பெர்மான்ஸ் சரியில்லை எனக்கு