Connect with us

தமிழ்நாடு

423 விபத்துக்கள்.. கண்டுகொள்ளாத நெடுஞ்சாலைத்துறை.. பரிதாபமாக உயிரிழந்த ஜோஹோ பெண் ஊழியர்!

Published

on

தாம்பரம் – மதுரவாயில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே 423 விபத்துக்கள் நடந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு இளம்பெண் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று 22 வயது இளம் பெண் ஒருவர் தனது சகோதரரை நீட் பயிற்சி வகுப்பிற்காக அழைத்துச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென சாலையில் இருந்த ஒரு பள்ளம் காரணமாக அவர் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஜோஹோ நிறுவனத்தின் ஊழியர் என்பதால் அந்நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஒரு மோசமான ரோடு காரணமாக ஒரு குடும்பம் தனது அன்பான மகளை இழந்து விட்டது என்றும் எங்கள் நிறுவனம் ஒரு நல்ல ஊழியரை இழந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சாலையில் வடிகால் 32 கிலோ மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டாலும், 11 கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் மீதி உள்ள தூரத்தை மூடுவதற்காக மேல் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சாலையில் 423 சாலை விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் தற்போது தான் இளம்பெண்ணின் மறைவிற்குப் பின்னர் சாலையில் உள்ள பள்ளங்களை சரி செய்யும் பணி நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் சாலையில் பள்ளங்கள் சிக்கி மரணம் நிகழ்வது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் ஒருசாலை விபத்து கூட நடைபெறவில்லை என கடந்த 2021ஆம் ஆண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால் மதுரையில் மட்டும் நடந்த சாலை விபத்தில் 4 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாக உள்ளது.

 

இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போது அந்த சாலை யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பதை ஒரு சில துறைகள் மாற்றி மாற்றி கூறி வருவதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது யார் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. நேற்று விபத்து நடந்த இந்த சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வரும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் மாநில நெடுஞ்சாலை துறையோ, இந்த சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக கூறி மாறிமாறி கை காட்டி வருகிறது.

மொத்தத்தில் சாலையின் தரத்தை அதிகரித்தால் மட்டுமே விபத்துகள் நடக்காமல் இருக்கும் என்றும் சாலைகளின் தரத்தை பராமரிக்க வேண்டியது மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் கடமை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்22 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

Translate »
10 8jj bet क्या है और मैं कैसे ज्वाइन करूँ ?. 運営会社. mahmutbey korsan taksi | 7/24 güvenli, hızlı ve ekonomik ulaşım.