இந்தியா
பாஜக கூறிய 15 லட்சம் படிப்படியாக வழங்கப்படும்: சிரிப்பு மூட்டும் மத்திய அமைச்சர்!
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பிரச்சாரம் செய்த பாஜக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் ஒவ்வொரு குடிமகன் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என கூறியது. ஆனால் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது, இதுவரை அந்த 15 லட்சம் ரூபாய் யாருடைய வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படவில்லை.
இதனை காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் விமர்சித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியிலும் இதுகுறித்த அதிருப்தி நிலவி வருகிறது. ஆனால் இதுகுறித்து சமீபத்தில் கூறிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நினைப்பில் வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். ஆனால் எதிர்பாராத விதமாக ஆட்சிக்குவந்துவிட்டோம் என்றார்.
இந்நிலையில் இந்த 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி குறித்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரும் மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே கருத்து தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து மீண்டும் 15 லட்சம் ரூபாய் குறித்து பொதுமக்களை பேச வைத்துள்ளது.
15 இலட்சம் ரூபாய் ஒரே தவணையாக வழங்கப்படாது. படிப்படியாக அது வழங்கப்படும். ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டோம், ஆனால் அவர்கள் அதை வழங்கவில்லை. மேலும் சில தொழில்நுட்ப காரணங்களாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.