வணிகம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு மே மாதத்தில் 4% அகவிலைப்படி உயர்வு மற்றும் ரூ.10,000 வரை போனஸ்!

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மே மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 4% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன் ரூ.10,000 வரை போனஸும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
DA உயர்வு மற்றும் போனஸ் விவரம்:
மோடி அரசு 4% அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயர்வு, ஏழாவது ஊதியக் குழுவின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. புதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையுடன் கூடிய இந்த தொகை மே மாத மூன்றாவது வாரத்தில் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் அதிகம் பயனடைவார்கள்.
போனஸ் எவ்வளவு?
இந்த ஆண்டு போனஸாக சுமார் ரூ.6,500 முதல் ரூ.7,100 வரை வழங்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக ரயில்வே, பாதுகாப்புத்துறை, தபால் துறை, நவோதயா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் போன்றவர்கள் இந்த போனஸை பெறவுள்ளனர்.
பயனடையும் ஊழியர்கள்:
மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், மத்திய மற்றும் நவோதயா பள்ளி ஆசிரியர்கள், பாதுகாப்புத் துறை வீரர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் இந்த பயன்களைப் பெற உள்ளனர். மொத்தம் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் நன்மை அடைவார்கள்.















