Connect with us

இந்தியா

வீடு வாங்குவதை விட வாடகைக்கு இருப்பதை விரும்பும் பெரும்பாலானோர்.. என்ன காரணம்?

Published

on

By

ரியல் எஸ்டேட் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக சொந்த வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு வாங்க அதிக நபர்கள் விருப்பத்துடன் இருப்பதாக கருத்துக்கணிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

குறிப்பாக மும்பையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 11% வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையில் 10 ஆயிரத்து 379 வீடுகள் பொதுமக்களால் வாங்கப்பட்ட நிலையில் 2023 பிப்ரவரில் 9269 வீடுகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது என்றும் இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒன்பது சதவீதம் குறைவு என்றும் கூறப்படுகிறது.

வீடுகள் வாங்குவதை விட வீடுகள் வாடகைக்கு எடுப்பதையே மக்கள் விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக சொந்த வீடு வாங்குவதற்கு வங்கியில் லோன் வாங்கினால் கடன்களின் வட்டி விகிதம் அதிகரித்து வருவது ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் போது வீட்டுக்கு கடன்களுக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்படுகிறது. இதனால் இஎம்ஐ அதிகரிக்கப்படுகிறது அல்லது மாதங்கள் அதிகரிக்கப்படுகிறது என்பதால் வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவதாக வாங்கிய வீட்டை விற்கும் போது அதன் மதிப்பு குறைவாக மதிப்பிடப்படுகிறது என்றும் ஒவ்வொரு ஆண்டும் வீடுகளின் மதிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது தாக ஒரு சொத்து வாங்குவதற்கு செலவு செய்யப்படும் தொகையின் வட்டி பொதுமக்களால் தற்போது கணக்கு பார்க்கப்படுகிறது. 40 லட்சம் கொடுத்து ஒரு வீட்டை வாங்கினால் 12 சதவிகித வட்டி போட்டால் கூட மாதம் 40 ஆயிரம் வட்டி கிடைக்கும். ஆனால் அந்த வீடு பத்தாயிரம் ரூபாய்க்கு கூட வாடகைக்கு போவது இல்லை என்ற நிலை இருப்பதால் வட்டி கணக்கு பார்க்கும் முதலீட்டாளர்கள் வீடுகளை வாங்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கடனின் வட்டி விகிதம் அதிகரித்து வருவதால் கடனை செலுத்துபவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்றும் பலர் கடனை செலுத்த முடியாமல் வீட்டை விற்க வேண்டிய நிலை வருவதாகவும் அதனால் தான் சொந்த வீடு வாங்குவதில் சுணக்கம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

வீடு வாங்குவதை விட வாடகைக்கு வீடு எடுப்பதில் பல நன்மைகள் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஒரு வீட்டை வாங்கி அதற்கு மாதமாதம் தவணை கட்ட வேண்டும் என்ற மன அழுத்தத்திலிருந்து விடுபடுகிறது என்றும் ஒரு குறிப்பிட்ட தொகை வாடகையாக மட்டும் செலவழித்து விட்டு நிம்மதியாக இருந்து விடலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அடிக்கடி பணி மாறுபவர்கள் வாடகை வீட்டில் இருந்தால் அலுவலகத்திற்கு அருகிலேயே வீடு மாறிக் கொள்ளலாம் என்றும் ஆனால் சொந்த வீட்டில் உள்ளவர்கள் பணியிடம் மாறினால் வேறு வழியின்றி அலுவலகத்திற்கு வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு பெரிய தொகை கொடுத்து வீட்டை வாங்குவதை விட அந்த தொகையை மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட முதலீட்டில் சேமித்தால் அதில் கிடைக்கும் வட்டியின் ஒரு சிறிய பகுதியை மட்டும் வாடகைக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மீண்டும் சேமிக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சினிமா8 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு8 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா8 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா9 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்9 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா9 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்11 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்11 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு11 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

தமிழ்நாடு11 hours ago

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு4 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+