Connect with us

வணிகம்

ஜவளி, வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயரும் அபாயம்.. காரணம்..

Published

on

இனி சில மாதங்களில் ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்படும் என்று தகவல்கள் வந்துள்ளன.

பொதுவாக எந்தவொரு பொருளானாலும் அதன் விலையானது மூலப்பொருட்களின் விலை வைத்தே நிர்ணயம் செய்யப்படுகின்றன. மூலப் பொருட்களின் விலை கூடினால், அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தி பொருட்களின் விலையும் கூடிவிடும்.

அந்த வகையில், தற்போது அட்டை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக பசை மற்றும் கிராப்ட் தாள், ஸ்ட்ரிச்சிங்பின், காகிதம் உள்ளிட்ட பொருட்களின் விலை 5 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

மேலும், அட்டை உற்பத்திக்கு தேவையான காகித கழிவுகளை குறிப்பிட்ட சில வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கி வந்தன. தற்போது அந்த நிறுவனங்களும் காகித சப்ளையை நிறுத்தி விட்டன.

இதன் காரணமாக ஒட்டுமொத்த அட்டை உற்பத்தியின் விலையும் உயருகிறது. ஜவுளி, வீட்டு உபயோகப்பொருட்கள் என அனைத்தும் அட்டையில் வைத்து தான் நேர்த்தியாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அட்டையின் விலை கூடும் போது, உணவுப்பொருட்கள் வரையில் அதன் தாக்கம் ஏற்படுகிறது.

எனவே, இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வெளிநாட்டிலிருந்து காகித கழிவுகளை வழங்கும் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?