வணிகம்
சம்பளத்தை குறைத்த டெக் மஹிந்தரா.. நோட்டீஸ் அனுப்பிய தொழிலாளர் நல அமைப்பு!
கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தது மட்டுமல்லாமல், மஹிந்தரா நிறுவ்னாம் ஊழியர்களுக்கு வழங்கி ஷிப்ட் அலவென்ஸையும் நிறுத்தியுள்ளது. அதனால் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த புகார்கள் புனே தொழிலாளர் நல அமைப்புக்கு வந்ததை அடுத்து, டெக் மஹிந்தரா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டெக் மஹிந்தரா நிறுவனம், ஷிப்ட் அலவென்ஸ் என்பது, பகல் நேரத்தை தவிரப் பிற ஷிப்ட்டுகளில் பயணம் செய்து பணியாற்ற வருபவர்களுக்காக அளிப்பது. அனைவரும் தற்போது வீட்டிலிருந்து பணி செய்து வருவதால் தான் அதை நிறுத்தியுள்ளோம் என்று குறியுள்ளது.
டெக் மஹிந்தராவின் இந்த சம்பள குறைப்பு விவகாரத்தில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.