வணிகம்
நான் அரசியலில் இணைந்தால் மூன்றாம் உலக போர் வரும்: இந்திரா நூயி!
பெப்ஸிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி எப்போதும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் இவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்குத் தான் அரசியலுக்கு வந்தால் மூன்றாம் உலகப் போர் வரும் என்று கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் அரசவையில் இருந்து அழைப்பு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு நானும், அரசியலும் ஒன்று சேர முடியாது. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசமாட்டேன். எனக்கு ராஜ தந்திரங்கள் தெரியாது என்றும் கூறினார்.
கடந்த 40 ஆண்டுகளில் பெப்ஸிகோ நிறுவனத்தில் காலை 4 மணிக்குத் தனது பணிகளைத் தொடங்கி 18 முதல் 20 மணி நேரம் வரை தினமும் வேலை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு 62 வயது ஆகும் நிலையில் பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 2019-ம் ஆண்டு வரை இவர் பெப்ஸிகோ நிறுவனத்தின் ஓர் தலைவராக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.