வணிகம்
கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியபின் 4 வருடம் கழித்து புகார் அளித்துள்ள எஸ்பிஐ!
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும்.
இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ளனர். அளித்த கடனுக்கு வட்டி மற்றும் அசல் தொகை தவணை ஏதும் செலுத்தாமல் இருந்துள்ளனர். பின்னர் 2016-ம் ஆண்டு கூட்டாக நிறுவனத்தில் ஆய்வும் மேற்கொண்டுள்ளனர்.
ஆய்வை செய்த சில நாட்களில் அந்த நிறுவனர் வெளிநாடு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு கடன் வாங்கியவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
வெளிநாடு தப்பி ஓடி 4 வருடங்கள் ஆகும் என்று கூறப்படும் நிலையில், புகார் அளிப்பதில் எஸ்பிஐ தாமதம் ஏதும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. தற்போது இந்த புகாரை பெற்றுக்கொண்ட சிபிஐ, வழக்கை விசாரித்து வருகிறது.