வணிகம்
கொரோனா எதிரொலி.. 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் ஹோண்டா மோட்டார் சைக்கிள்!
இந்தியாவில் கொரோனா தொற்று பெரும் அளவில் அதிகரித்து வரும் நிலையில், 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹோண்டா மோட்டர் சைக்கிள் நிறுவனத்துக்கு ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. எனவே மே 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தங்களது 4 ஆலைகளிலும் ஹோண்டா நிறுவனம் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அலுவலக வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம் என்றும் ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் கூறியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.