வணிகம்
புற்றுநோய் மருந்துகள் விலை 87% குறைந்தது… எப்படி?
மத்திய அரசு 390 புற்றுநோய் மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை முதல் 87 சதவீதம் குறைவதாக அறிவித்துள்ளது.
மருந்து கட்டுப்பாடுகள் ஆணையம் 42 புற்று நோய் மருந்துகள் மீதான மார்ஜினை 30 சதவீதமாகக் குறைக்க வேண்டுமே என்று நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு விதித்ததை அடுத்து இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது.
விலை குறைப்பானது பிராண்டுகளை பொருத்து மாரும். அதிகபட்சம் 86.79 சதவீதம் வரை புற்று நோய் மருந்துகள் விலை குறையும். இந்த விலை குறைப்பை மருந்து நிறுவனங்கள் நோயாளிகளுக்கு முறையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் நாடு முழுவதிலிமிருந்தும் 22 லட்சம் புற்றுநோய் பாதிப்படைந்தவர்கள் பயனடைவார்கள் என்று கூறுகின்றன.