Connect with us

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை அடுத்து உயரும் மின், பேருந்து கட்டணம்: அதிர்ச்சி தகவல்

Published

on

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், காய்கறிகள், மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவை தொடர்ச்சியாக விலையேறி கொண்டு இருப்பதால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு தலையில் இறங்கும் இடியாக மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு, ‘மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக கூறியிருப்பதால் பேருந்து கட்டண உயர்வு கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

busஅதேபோல் மின் கட்டணம் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது மின் கட்டணம் சாதாரண பொதுமக்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இனி மின் கட்டணம் உயர்த்தப்பட்டால் ஏழை எளிய நடுத்தர மக்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

வருமானம் உயராத நிலையில் விலைவாசி பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் உயர்ந்து கொண்டே இருந்தால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணம் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

 

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?