உலகம்

போட்டோஷூட்டில் கணவரை நீரில் தள்ளிவிட்ட மணப்பெண் – வைரல் வீடியோ

Published

on

திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.. இந்த சம்பவங்கள் வீடியோவாக வெளிவந்து பலரையும் ரசிக்க வைப்பதுண்டு. அதுபோன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. தற்போது திருமணம் என்றாலே மணக்கோலத்தில் போட்டோஷூட் எடுப்பது வழக்கமாகிவிட்டது. விதவிதமான உடைகளில் போட்டோஷூட் எடுத்து ஆல்பமாக வைத்துகொள்கின்றனர்.

இந்நிலையில், ஒரு பெரிய தொட்டியில் மேடை அமைத்து மணமகனையும், மணமகளையும் அதில் நிற்க வைத்து ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதன்பின் அந்த மேடை மீது ஏறி எப்படி மணமகனை பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும் என போஸ் கொடுத்து காட்டினார். அப்போது, அவர்கள் இருவரையும் மணமகள் கீழே தள்ளிவிட அவர்கள் தண்ணீரில் போய் விழுந்தனர். இந்த வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version