Connect with us

சினிமா செய்திகள்

அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு!

Published

on

பாலிவுட் பிரபலங்களான அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

நடிகர்கள் நடிப்பதற்காக வாங்கிய சம்பளம் மட்டுமின்றி விளம்பரங்களிலும் அதிக அளவு நடித்து மிகப்பெரிய வருமானத்தை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்தவகையில் அமிதாப், ரன்வீர்சிங், ஷாருக்கான், அஜய்தேவ்கான் ஆகிய நால்வரும் புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா ஆகிய பொருட்களுக்கு விளம்பரம் செய்வதாக பீகார் மாநில நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

சமூக ஆர்வலர் தமன்னா ஹாஸ்மி என்பவர் தாக்கல் செய்த இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது குற்றம்சாட்டப்பட்ட நான்கு பாலிவுட் பிரமுகர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பதற்காக புகையிலை பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் நடிகர்களுக்கு ஏற்கனவே கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் புகையிலைப் பொருட்களுக்கு விளம்பரம் செய்ய மாட்டேன் என்று கூறிய நிலையில் அவரை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

 

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?