Connect with us

தமிழ்நாடு

நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் ஆவேசம்!

Published

on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் தோல்வியை தழுவியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கைத் துரோகி என கடுமையாக விமர்சித்துள்ளார்.

#image_title

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, மாண்புமிகு அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது.

#image_title

இதனை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஒருங்கிணைத்து கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. விரைவில் அவை தொடங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், ஓர் இடைத் தேர்தலில், அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.

இரட்டை இலை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்ற அறிவுரையை நாம் ஏற்றுக் கொண்ட நிலையில்; உச்ச நீதிமன்ற அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து தன்னிச்சையாக ஒரே ஒரு வேட்பாளரை மட்டும் அறிவித்து, அந்த வேட்பாளரின் பெயரை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியபோது அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அதிகமான வாய்ப்புகள் இருந்தும், இரட்டை இலை சின்னம் பெறப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக அமைதி காத்த நிலையில், அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது என்றால், அதற்கு முழு முதற் காரணம் திரு. எடப்பாடி கே. பழனிசாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் என ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சினிமா செய்திகள்11 hours ago

பையா-க்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’னில்தான் இது நடக்கிறது: கார்த்தி

kamal
சினிமா செய்திகள்11 hours ago

மணிரத்னம் மீது பொறாமையாக உள்ளது: கமல்ஹாசன்

உலகம்12 hours ago

விவாகரத்து செய்த உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்.. மனைவிக்கு இழப்பீடாக $1 பில்லியன்..!

வேலைவாய்ப்பு12 hours ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 hours ago

17 பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற விமானம்.. மீண்டும் சொதப்பல்..!

Dasara Movie Review image
விமர்சனம்12 hours ago

தசரா விமர்சனம்: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு காதல் படம்!

இந்தியா12 hours ago

உலக வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு.. அமெரிக்க இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

சினிமா12 hours ago

”உலக அழகியை கட்டிப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு நன்றி”- நடிகர் சரத்குமார்!

சினிமா13 hours ago

பத்து தல விமர்சனம்: வெறித்தனம் பத்தல பத்தல!

தமிழ்நாடு14 hours ago

கொரோனா மாதிரிகளில் XBB வகை தான் அதிகம்: தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேலைவாய்ப்பு2 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு7 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

வேலைவாய்ப்பு2 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

42 ஆயிரம் சம்பளத்தில் CDSCO-ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு23 hours ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

NIEPMD சென்னை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!