கிரிக்கெட்

கடைசி ஓவரில் தொடர் சிக்சர்கள்: ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை த்ரில் வெற்றி!

Published

on

16வது ஐபிஎல் தொடரின் நேற்றைய 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால்அதிரடி சதம்

பட்லர் 18 ரன்களும், அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்னிலும், படிக்கல் 2 ரன்னிலும், ஹோல்டர் 11 ரன்னிலும், ஹிட்மயர் 8 ரன்னிலும், துருவ் ஜுரேல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுபக்கம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உள்பட 124 ரன்கள் குவித்து அவுட் ஆனார். முடிவில் ராஜ்ஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் அர்ஷத் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை த்ரில் வெற்றி

213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ரோகித் 3 ரன்னில் அவுட் ஆக, இஷான் கிஷன் 28 ரன்னில் அவுட் ஆனார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிரீன் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் டிம் டேவிட் பொறுப்பான மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் 3 பந்துகளில் டிம் டேவிட் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்க விட்டார். இதன் மூலம் 19.3 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களை எடுத்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் திரில் வெற்றிபெற்றது. மும்பை அணியின் திலக் வர்மா 29 ரன்களுடனும், டிம் டேவிட் 5 சிக்சர்களுடன் 45 ரன்களுடனும் களத்தில் நின்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

Trending

Exit mobile version