வணிகம்

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநராகும் பாபா ராம்தேவ்!

Published

on

ருச்சி சோயா நிறுவனத்தின் போர்டு இயக்குநர் பதவி பாபா ராம்தேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பதஞ்சலி என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் பாபா ராம்தேவ். ஆனால் பாபா ராம்தேவுக்கு பதஞ்சலி நிறுவனத்தில் 2 சதவீத பங்குகள் கூட கிடையாது.

பாபா ராம்தேவின் நண்பரும், பதஞ்சலி நிறுவனத்தின் தலைவரும் ஆச்சர்யா பாலகிருஷ்ணா பெயரில் தான் 98.6 சதவீத பங்குகள் உள்ளன.

எப்எம்சிஜி துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி நிறுவனம், திவாலாகும் நிலையிலிருந்து ருச்சி சோயா நிறுவனத்தை 4,350 கோடி ரூபாய் கொடுத்து சென்ற ஆண்டு வாங்கியது.

தற்போது ருச்சி சோயாவின் முழுமையான பரிமாற்றங்களும் முடிவடைந்த நிலையில், சுச்சி சோயாவின் நிர்வாக இயக்குநர் பதவி பாபா ராம்தேவின் அண்ணன் ராம் பாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் முறையாகப் பதஞ்சலி நிறுவனத்துக்குச் சொந்தமான ருச்சி சோயா நிறுவனத்தில் பாபா ராம்தேவிற்கும் போர்டு இயக்குநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ரூச்சி சோயா நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனமாகும்.

Trending

Exit mobile version