Connect with us

இந்தியா

ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்டோர் டெல்லியில் திறப்பு!

Published

on

நம்மில் பலருக்கும் மிகப் பிடித்தமான மொபைல் என்றால் அது ஆப்பிள் ஐபோன் தான். ஆனால், இதன் விலை அதிகம் என்பதால் பலரால், இந்த மொபைலை வாங்க முடியவில்லை. இருப்பினும், சிலர் இஎம்ஐ வசதிகளைப் பயன்படுத்தி வாங்கி வருகின்றனர். இந்நிலையில்,
ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தலைநகர் டெல்லியில் ஒரு கிளையை திறந்துள்ளது.

ஆப்பிள் ஐபோன்

ஆப்பிள் ஐபோன் நிறுவனம் தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகின்றது. இங்கிருக்கும் சந்தை வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, ஐபோன் விற்பனையை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் பிரத்யேக ஸ்டோரை திறக்க முடிவு செய்தது. இந்தியாவில், ஆப்பிள் நிறுவனம் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் பிரத்யேக ஸ்டோரை அமைத்தது.

பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர்

இந்தியாவில் எப்போது பிரத்யேக ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அதன் பயனர்கள் இடையில் இருந்தது. இப்போது இந்த செயல் நிஜமாகி உள்ளது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் மற்றொரு பிரத்யேக ஸ்டோரை தலைநகர் டெல்லியில் இன்று திறந்துள்ளது.

தலைநகர் டெல்லியின் சாகேட்டில் இருக்கும் செலக்ட் சிட்டி வாக் மாலில், ஆப்பிள் சிஇஓ டிம் குக், இந்த ஸ்டோரை திறந்து வைத்தார். அதன் பின்னர், ஆப்பிள் நிறுவனப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, கைத்தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிறகு, ஆப்பிள் பிரத்யேக ஸ்டோருக்கு வருகை தந்த வாடிக்கையாளருடன் சற்று நேரம் பேசினார்.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?