Connect with us

உலகம்

மனிதர்களுக்கு புற்றுநோய் இருப்பதை எறும்புகள் கண்டுபிடித்துவிடுமா? மருத்துவர்களின் கண்டுபிடிப்பு

Published

on

புற்றுநோய் என்பது மனித குலத்திற்கு எதிரான ஒரு பயங்கர நோய் என்பதும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது நிவாரணம் செய்யும் அளவுக்கு மருத்துவம் தேறிவிட்டாலும் புற்றுநோய் என்றாலே பெரும் பயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புற்றுநோயை எறும்புகளால் கண்டுபிடிக்க முடியும் என்று மருத்துவர்கள் ஆராய்ச்சி முடிவு வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எறும்புகளுக்கு மூக்கு இல்லை என்றாலும் அது புற்றுநோய் வாசனையை கண்டுபிடித்துவிடும் என்றும், எறும்புகளின் ஆன்டெனாவில் ஏராளமான ஆல்ஃபாக்டரி சுரப்பிகள் இருப்பதால் அதன் மூலம் மனிதர்களின் புற்று நோய் கட்டிகளைக் கண்டறிய எறும்புகளை பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் குழு கண்டுபிடித்துள்ளது.


புற்றுநோய் கட்டிகள் வியர்வை மற்றும் சிறுநீர் போன்ற உடல் திரவங்கள் மற்றும் சுவாச நீராவி ஆகியவற்றில் அடிக்கடி ஏற்படும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் எனப்படும் இரசாயனங்களின் தனித்துவமான பதிப்புகளை வெளியிடுகின்றன. Proceedings of the Royal Society B: Biological Sciences இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, சிறுநீரில் உள்ள கலவைகளை எறும்புகள் மணக்கும்.

சோர்போன் பாரிஸ் நார்த் பல்கலைக்கழகத்தின் நெறிமுறை நிபுணர் மற்றும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான Baptiste Piqueret என்பவர் புற்றுநோய் உயிரணுக்களில் இருந்து ஆவியாகும் கரிம சேர்மங்களை எறும்புகளால் கண்டறிய முடியும் என்பதை ஏற்கனவே நிரூபித்திருந்தார்.

புற்ருநோய் பாதித்த எலிகளிடமிருந்து சிறுநீரை சேகரித்து அதில் சர்க்கரை நீரை வைப்பதன் மூலம், புற்றுநோய் கட்டிகளின் வாசனையை கண்டறியஆராய்ச்சியாளர்கள் எறும்புகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் மூலம் எலிகளிடம் உள்ள புற்றுநோயை எறும்புகள் கண்டுபிடித்தன என்பது இந்த ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி வருங்காலத்தில் மனிதர்களின் புற்றுநோயை கண்டுபிடிக்க பயிறி அளிக்கப்பட்ட எறும்புகளை பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?