Connect with us

தமிழ்நாடு

எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய் கசிவு!

Published

on

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் குழாய் உடைந்து இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவை அகற்றும் பணி தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகிறது. இது இன்றுடன் முடிவடையும் என கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் எண்ணூர் துறைமுகத்துக்கு மார்ஷல் தீவிலிருந்து 25400 டன் கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலில் இருந்து குழாய் மூலமாக கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, கச்சா எண்ணெய் செல்லும் குழாய் ஒன்றில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரண்டு டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது.

இதனை கண்ட அதிகாரிகள் உடனே கச்சா எண்ணெய் வெளியேற்றத்தை நிறுத்தி, துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து எண்ணை கசிவு குறித்து ஆய்வு செய்து கடலோர காவல் படைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு கடலில் படிந்த எண்ணெயை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து கடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எண்ணெய் படலத்தை அகற்றும் இந்த பணி இன்றுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 டன் எண்ணெய் கசிவு என்பது குறைவான அளவே என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கடந்த வருடம் ஜனவரி 28-ஆம் தேதி இரண்டு கப்பல்கள் விபத்துக்கு உள்ளானதில் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்ததால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டது. அப்போது எண்ணெய்ப் படலத்தை வாளியில் அள்ளிக்கொட்டி அகற்றியது சர்ச்சையாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?