Connect with us

தமிழ்நாடு

2,600 கோடி… ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பின்னணியில் அண்ணாமலை? விசாரணை கோரும் காங்கிரஸ்!

Published

on

ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னணியில் தமிழக பாஜகவும், அதன் தலைவர் அண்ணாமலை உள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். எனவே அவரை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

KS Alagiri 1

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 2,600 கோடிக்கும் மேல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் அரசியல் பின்னணி உள்ளது. இதற்குப் பின்னால் பாஜக உள்ளது. அண்ணாமலையுடன் நிதி நிறுவன அதிபர் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதற்காக சொல்லவில்லை.

நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மூன்று பேரை அழைத்து விசாரித்ததில், பாஜகவின் ஆதரவு இதில் உள்ளது, நிறுவனத்தின் உரிமையாளர் பாஜகவில் பொறுப்பில் உள்ளார். அண்ணாமலையுடன் அவருக்கு தொடர்பு உள்ளது. எனவே இந்த நிறுவனம் சரியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள் என தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு குற்றப்பிரிவு போலீசார் நேரடியாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும். வழக்கு போட வேண்டும் எனச் சொல்லவில்லை. விசாரித்தால் தான் உண்மை கிடைக்கும் என்று தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?