Connect with us

தமிழ்நாடு

அண்ணா பல்கலை புதிய பதிவாளர்: சிண்டிகேட் கூட்டத்தில் உதயநிதி!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரை தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருக்கும் ராணி மரிய லியோனி வேதமுத்து என்பவர் பணி ஓய்வு பெற உள்ளார். இதனை அடுத்து புதிய பதிவாளர் தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சிண்டிகேட் கூட்டம் கூட இருப்பதாகவும் இந்த கூட்டம் 263வது சிண்டிகேட் கூட்டம் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் யார் என்பதை சிண்டிகேட் உறுப்பினர்கள் உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்ட உதயநிதி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டு வருகிறது.

மேலும் இன்றைய சிண்டிகேட் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட மாற்றம், தேசிய கல்வி கொள்கை, பேராசிரியர் நியமனம், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் சேர்ந்து புதிய பதிவாளரை தேர்வு செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?